தேசிய சுதந்திர தின முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டம் இன்று (20) சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சகத்தின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் பிற பாதுகாப்புத் தலைவர்கள் மற்றும் அமைச்சகங்களுக்கான செயலாளர்கள் மற்றும் பிற அரசஅதிகாரிகள் கலந்து கொண்டனர்.